யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

தீவன தட்டைப்பயறு

பருவம் : இறவை ஜூன் – ஜூலை

உழவு : நிலத்தை இரும்புக்கலப்பை கொண்டு இருமுறையும் நாட்டுக்கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும்.
தொழு உரமிடுதல்  : எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடவேண்டும்.
பார் பிடித்தல்  : 30 செ.மீ. இடைவெளியில் 6 மீ நீளத்திற்கு பார்பிடிக்க வேண்டும். பார் பிடிக்காவிட்டால், பாசன நீரின் அளவைப் பொறுத்து 20 சதுர மீட்டருக்கு பாத்திகள் பிடிக்கவேண்டும்.
உரமிடுதல் : மண் பரிசோதனைக்கேற்ப உரங்களை இடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல்சத்து இடவேண்டும். இதனை 55:250:33 கிலோ, யூரியா, சூப்பர் பொட்டாஷ் உரங்கள் மூலமாக இடலாம்.
விதைப்பு : 3 பாக்கெட்டுகள் [600 கி] ரைசோபியம் உயிர் உரத்தை அரிசிக் கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.
விதை அளவு : எக்டருக்கு 40 கிலோ இடைவெளி 30 X 15 செ.மீ.
நீர் மேலாண்மை  : விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும் மற்றும் மூன்றாவது நாளில் உயிர்ப்பு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் அளிப்பது சிறந்தது.
களை நிர்வாகம்  : தேவைப்படும் போது களை எடுக்கவும்.
பயிர் பாதுகாப்பு  : பொதுவாகத் தேவையில்லை
அறுவடை : விதைத்த 50-55 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். [50 சதம் பூக்கும் தருவாயில்]
தகவல் : இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் உழவியல் துறை, அடிப்படை அறிவியல் புலம், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை- 600 007, தொலைபேசி: 044-25304000.
தகவல் அனுப்பியவர் : முருகன், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், திருவையாறு

நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற பயறு வகைத் தீவனப்பயிர்கள்

பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு புரதச் சத்து அதிகம் உள்ள பயறுவகைத்தீவனங்கள் மிகவும் அவசியமானவை. பயறு வகைத் தீவனங்களில் புரதச் சத்தும், தாது உப்புக்களும், அதிக அளவில் உள்ளன. புல்வகைத்தீவனங்களுடன், பயறு வகைப் பசுந்தீவனப் பயிர்களைக் கலந்து கொடுப்பது நல்ல பயனுள்ள அடர்த்தீவனப்பொருட்களை கொடுப்பதற்கு சமமாகும்.

பயறு வகைத் தீவனப்பயிர்களின் குணாதிசியங்கள்:
  1. அதிகப் புரதச் சத்து உடையது
  2. அதிக தாது உப்புக்களைக் கொண்டது
  3. மிக எளிதில் சீரணிக்கக்கூடியது
  4. பயிரிடப்படும் நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்கக்கூடியது
மானாவாரியில் பயிர் செய்யவதர்ல்கு ஏற்ற சிறந்த பயறு வ்காஇத் தீவனப்பயிர்களான வேலி மசால், குதிரை மசால் மற்றும் தட்டைப்பயிறு போன்றவைகள் ஆகும். இவற்றில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் மற்ற தீவனப்பயிர்களில் இருப்பதை விட மிக அதிக அளவில் உள்ளன.
தகவல்: முனைவர் க.இராமகிருஷ்ணன், முனைவர் க.சிவக்குமர், முனைவர் வே.இரமேஷ் சரவணகுமார், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் – 637 002.

குதிரை மசால்

குதிரை மசால் [மெடிக்காகோ சைட்டைவா] [ஏக்கருக்கு]

‘தீவனங்களின் அரசி’ என்று அழைக்கப்படுகின்ற இதில் 20 சதவீதம் புரதச்சத்தும், 2.30 சதவீதம் சுண்ணாம்பு சத்து 0.23 சதவீதம் பாஸ்பரஸ் சத்தும் உள்ளது. இதனை தினமும் கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் கொடுக்கவேண்டும். இதன் அளவு அதிகமானால் “வயிறு உப்பல்” ஏற்பட வாய்ப்புள்ளது. இது குளிர்கால இறவைப் பயிராகும்.
பருவம் : புரட்டாசி மாதம் ஏற்ற தருணம்
நிலம் : வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலம்
விதை : 8 கிலோ
இடைவெளி : வரிசைக்கு வரிசை 30 செ.மீ. வரிசையில் நெருக்கமாக விதைக்கவேண்டும்.
இரகம் : கோ-1
உரஅளவு அடியுரம் : தொழு உரம் – 10 டன்கள், தழைச்சத்து – 10 கிலோ மணிச்சத்து – 48 கிலோ, சாம்பல் சத்து -16 கிலோ
மேலுரம் : 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும்
மகசூல் : 28-32 டன்கள் பசுந்தீவனம் கொடுக்கவேண்டும்
குறிப்பு : மூன்றாவதாண்டுப் பயிரின் மகசூல், முதலாண்டுப் பயிரின் மகசூலில் 60 சதவீதம் இருப்பதால், இப்பயிரை இரண்டாண்டுக்குப் பின் அழித்துவிட்டு புதிதாகப் பயிர் செய்ய வேண்டும்.
தகவல்: முனைவர் க.இராமகிருஷ்ணன், முனைவர் க.சிவக்குமர், முனைவர் வே.இரமேஷ் சரவணகுமார், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் – 637 002.

வேலி மசால்

பருவம் : இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் ஜூன், அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம்.

உழவு : இரும்பு கலப்பை கொண்டு 2 அல்லது 3 முறை உழவேண்டும். தொழு உரம் அல்லது கம்போஸ் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.
பார்கள் அமைத்தல் : 50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.
உரமிடுதல் : மண் பரிசோதனையின்படி உரமிடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். விதைப்புக்கு முன் அடியுரமாக முழுஅளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இடவும்.
விதையளவு : எக்டருக்கு 20 கிலோ விதை என்ற அளவில் பார்களின் இருபுறமும் தொடர்ச்சியாக விதைக்கவும். 3 பாக்கெட்டுகள் [600 கிராம் ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.
நீர் மேலாண்மை : விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும் மற்றும் மூன்றாவது நாளில் உயிர்ப்பு நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பின்பு வாரம் ஒரு முறை பாசனம் அளிப்பது சிறந்தத்து.
களை நிர்வாகம் : தேவைப்படும் போது களை எடுக்கவும். அறுவடை விதைத்த 90 நாட்களுக்குப் பிறகு 50 செ.மீ. உயரத்தில் முதல் அறுவடை செய்யவேண்டும். அடுத்தடுத்த அறுவடைகள் 40 நாட்கள் இடைவெளியில் செய்யவேண்டும்.
எக்டருக்கு 125 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.
கலப்புப் பயிர் விதைத்த 60 நாட்களுக்குப் பிறகு முதல் அறுவடையும், அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யவேண்டும்.
குறிப்பு :
  • விதைகள் நன்றாக விதை நேர்த்தி செய்யவேண்டும். கொதித்த நீரை 3-4 நிமிடங்கள் கீழே வைத்து, பின் அதில் வேலிமசால் விதைகளைப் போடவேண்டும். 4 நிமிடங்கள் கழித்து நீரை வடித்துவிட்டு விதையை நிழலில் உலர வைத்து விதைத்தால் சுமார் 80 சதவீதம் முளைப்புத்திறன் கிடைக்கும்
  • வேலிமசால் விதைகளை கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லுடன் 1:3 என்ற விகிதத்தில் ஊடுபயிர் செய்யலாம்
தகவல் : இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் உழவியல் துறை, அடிப்படை அறிவியல் புலம், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை- 600 007, தொலைபேசி: 044-25304000.
தகவல் அனுப்பியவர் : முருகன், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், திருவையாறு

How to Trim Goat Hooves


பஞ்சாப் மாநில விவசாய மாநாட்டின், கண்காட்சி

பஞ்சாப் மாநில விவசாய மாநாட்டின், கண்காட்சியில் பங்கேற்ற விவசாயி ஒருவரின் எருமைக்கு, 10 கோடி ரூபாய் வரை பணம் கொடுப்பதாக வெளிநாட்டினர் ஒருவர் கூறியும், அந்த எருமையின் உரிமையாளர் விற்க மறுத்துவிட்டார்.

பஞ்சாபில், முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. இங்குள்ள, மொகாலியில், இரு தினங்களுக்கு முன், முதல்வர் பாதல், பஞ்சாப் விவசாய உச்சி மாநாட்டை துவக்கி வைத்தார். இதில், விவசாயம் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. இங்கு, இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் வந்திருப்பதால், உள்நாட்டு விவசாயிகள், தங்கள் பயிர் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு பற்றிய சாதனைகளை வெளிநாட்டு விவசாயிகளிடம் காண்பிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கண்காட்சியில், கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்த, லம்பர்தார் சோமல் என்பவர், தன், கொழு கொழு எருமையை பார்வையாளர்களிடம் காண்பிப்பதற்காக அழைத்து வந்தார். 5 அடி, 8 அங்குல உயரமும், 11 அடி நீளமும் உடைய இந்த எருமை, 1,200 கிலோ எடை கொண்டுள்ளது. தினசரி தீவனத்துடன், 10 லிட்டர் பால் குடிக்கும் பழக்கமுள்ள இந்த எருமையைக் கண்டு, உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டை சேர்ந்த பலரும் வியப்படைந்துள்ளனர். சிறந்த எருமை வளர்ப்பிற்கான மாநில, தேசிய அளவிலான, பல போட்டிகளில் தன் எருமையுடன் கலந்து கொண்ட சோமல், அனைத்திலும் முதல் பரிசை பெற்றுள்ளார்.

இதுவரை இந்த மாதிரியான எருமையை பார்த்திராக வெளிநாட்டினர் பலரும், கோடிக் கணக்கில் பணம் கொடுத்து, இதை விலைக்கு வாங்க முன் வந்துள்ளனர். அதிகப்படியாக, வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், 10 கோடி ரூபாய் வரை விலை கொடுப்பதாக கூறியும், சோமல் தன் எருமையை விற்க மறுத்துவிட்டார். எருமையை தன் பிள்ளை போல் வளர்த்து வருவதாகக் கூறியுள்ள சோமல், தொடர்ந்து, பல போட்டிகளில் தன் எருமை மாட்டை பங்கேற்க செய்து, வெற்றி பெற திட்டமிட்டுள்ளார்
மொகாலி: பஞ்சாப் மாநில விவசாய மாநாட்டின், கண்காட்சியில் பங்கேற்ற விவசாயி ஒருவரின் எருமைக்கு, 10 கோடி ரூபாய் வரை பணம் கொடுப்பதாக வெளிநாட்டினர் ஒருவர் கூறியும், அந்த எருமையின் உரிமையாளர் விற்க மறுத்துவிட்டார்.

பஞ்சாபில், முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. இங்குள்ள, மொகாலியில், இரு தினங்களுக்கு முன், முதல்வர் பாதல், பஞ்சாப் விவசாய உச்சி மாநாட்டை துவக்கி வைத்தார். இதில், விவசாயம் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. இங்கு, இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் வந்திருப்பதால், உள்நாட்டு விவசாயிகள், தங்கள் பயிர் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு பற்றிய சாதனைகளை வெளிநாட்டு விவசாயிகளிடம் காண்பிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கண்காட்சியில், கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்த, லம்பர்தார் சோமல் என்பவர், தன், கொழு கொழு எருமையை பார்வையாளர்களிடம் காண்பிப்பதற்காக அழைத்து வந்தார். 5 அடி, 8 அங்குல உயரமும், 11 அடி நீளமும் உடைய இந்த எருமை, 1,200 கிலோ எடை கொண்டுள்ளது. தினசரி தீவனத்துடன், 10 லிட்டர் பால் குடிக்கும் பழக்கமுள்ள இந்த எருமையைக் கண்டு, உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டை சேர்ந்த பலரும் வியப்படைந்துள்ளனர். சிறந்த எருமை வளர்ப்பிற்கான மாநில, தேசிய அளவிலான, பல போட்டிகளில் தன் எருமையுடன் கலந்து கொண்ட சோமல், அனைத்திலும் முதல் பரிசை பெற்றுள்ளார்.

இதுவரை இந்த மாதிரியான எருமையை பார்த்திராக வெளிநாட்டினர் பலரும், கோடிக் கணக்கில் பணம் கொடுத்து, இதை விலைக்கு வாங்க முன் வந்துள்ளனர். அதிகப்படியாக, வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், 10 கோடி ரூபாய் வரை விலை கொடுப்பதாக கூறியும், சோமல் தன் எருமையை விற்க மறுத்துவிட்டார். எருமையை தன் பிள்ளை போல் வளர்த்து வருவதாகக் கூறியுள்ள சோமல், தொடர்ந்து, பல போட்டிகளில் தன் எருமை மாட்டை பங்கேற்க செய்து, வெற்றி பெற திட்டமிட்டுள்ளார்

வியாழன், 27 பிப்ரவரி, 2014

கால்நடை தகவல்

உலகில் காணப்படும் பல்வேறு பசு இனங்களில் தலைசிறந்த இனமாகவும் அதிக கறவை மற்றும் அனைத்து விதமான சுற்றுச் சூழலையும் சமாளித்து வாழக்கூடிய சக்தி கொண்ட இனமாக அடையாளம் காணப்பட்டது தான் ஜெர்சி பசு. உலகின் பெருவாரியான நாடுகளில் இன்று ஜெர்சி கலப்பின பசுவே பண்ணையாளர்களின் சிறந்த தேர்வாக இருக்கிறது. பால் பண்ணை அமைக்க திட்டமிடுபவர்கள் கலப்பின ஜெர்சி இன பசுக்களை வளர்க்கலாம்.

உடலமைப்பு மற்றும் பொது குணங்கள்

நேர்கோடான முதுகு, நேர்த்தியான தலை அமைப்பும் உறுதியான சிறந்த மடியுடன் அழகிய தோற்றம் கொண்டது ஜெர்சி. உடல் எடை 400 முதல் 820 கிலோ வரை எடை கொண்டது. இளஞ்சிவலை அல்லது தேன்சிவலை நிறத்தில் காணப்படும் இந்த பசுவினம் சில நேரங்களில் உடலில் வெள்ளை நிறப்பட்டைகளையும் கொண்டிருக்கும்.

கால் குளம்புகள் கருப்பு நிறத்தில் உறுதியுடன் காணப்படுகிறது. உறுதியான குளம்புகள் உள்ளதால் கால் மற்றும் குளம்பு தொடர்புடைய நோய்கள் ஜெர்சி பசுவினத்திற்கு குறைவாகவே ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்சியின் வால் முடி கருப்பு நிறத்தில் இருக்கும். வெப்ப மண்டல பகுதிகள் மற்றும் குளிர்மண்டல பகுதிகள் இரண்டிலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழும். அமைதியான குணமுள்ளது.

இந்த பசு சிறந்த மேய்ச்சல் திறன் கொண்டது. குறைந்த பராமரிப்பு செலவில் அதிக அளவு பால் தரும் இனமாகும். இனவிருத்தி திறனும் அதிகமுள்ளது. கன்று ஈனும் போது ஏற்படும் பிரச்சினைகளும் குறைவு. ஜெர்சி பசுவின் முதல் கன்று பிறப்பு 26 முதல் 30 மாதத்தில் ஏற்படுகிறது. இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட கன்று இடைவெளி காலம் 12 முதல் 13 மாதமாக உள்ளது. சிறந்த சத்துக்களை கொண்ட பாலை இது தருவதால் பன்னீர், ஜஸ்கிரீம், தயிர் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கலாம்.

அடையாளம் காணுதல்

அதிக கறவை தரும் பசுக்களை சில அடையாளங்களை வைத்து அறிந்து வாங்கி விடலாம்.

ஜெர்சி பசுக்களுக்கு எடுத்துரைக்கப்பட்ட உடலின் நிறம், வெளிப்புற தோற்ற அமைப்பு போன்றவற்றை கவனித்து வாங்க வேண்டும்.

நாள் முழுவதும் தீவனம் தின்று நன்கு செரிமானமாகும் தன்மை கொண்ட கலப்பின ஜெர்சி பசுக்களை தேர்வு செய்ய வேண்டும். பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளை வாங்கும் போது அந்த பண்ணையில் சராசரி பால் உற்பத்தியை விட அதிகம் பால் உற்பத்தி செய்யும் தலை ஈத்து, இரண்டாம் ஈத்து பசுக்களையே தேர்வு செய்ய வேண்டும்.

ஆந்த்ராக்ஸ் நோய், ரத்தநீர் நோய், தைலேரியா நோய், காய்ச்சல் நோய் அதிகம் ஏற்படும் பகுதிகளில் இருந்து பால் மாடுகளை வாங்க கூடாது.

கானை நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டு, உடல் முழுவதும் அதிக ரோமம் வளர்ச்சியுள்ள பசுக்களை தேர்வு செய்யக் கூடாது.

அடிக்கடி மாடுகளில் குறைப்பிரசவம், இளங்கன்று இறப்பு ஏற்படும் பகுதியில் கருச்சிதைவு நோய் பாதிப்பு இருக்கலாம். எனவே இத்தகைய பாதிப்புகள் இல்லாத கலப்பின ஜெர்சி பசுக்களை தேர்வு செய்ய வேண்டும். பால் மாட்டின் தலை ஒரு பங்காகவும், உடல் ஒரு பகுதி ஒன்பது பங்காகவும் கொண்ட உடல் அமைப்பில் உள்ள பால் மாட்டினை தேர்வு செய்ய வேண்டும்.

பால் மாட்டின் முதுகுப் பகுதி தலை முதல் வால் வரை ஒரே நேர்கோடாக இருக்க வேண்டும். முதுகுப் பகுதியில் அதிக வளைவுகள் உள்ள கலப்பின ஜெர்சி பசுக்களை தேர்வு செய்ய கூடாது.

கால்கள் திடகாத்திரமாக நன்கு பொருந்திய நிலையில் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு உள்ள மாடுகளை தேர்வு செய்ய வேண்டும்.

பால் மாட்டின் குளம்பு இறுகிய தன்மையுடன் குளம்பின் உட்பகுதி தேய்மானமின்றி பள்ளம் மேடுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

பால்மடி முழுவதும் ஒரே சீரான பஞ்சு போன்று தடவி பார்க்கும் போது காணப்பட வேண்டும். பால் காம்பு ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடிக்குள் அடங்கும் அளவுடன் நான்கு காம்புகளும் இடைவெளியில் இருக்க வேண்டும்.

பால் கறந்து பரிசோதனை செய்யும் போது பால் மாடு அமைதியாக இருக்க வேண்டும். பால்காம்புகள் நான்கிலும் ஒரே சீரான வேகத்துடன் ஒரே திசையில் பால் வெளியேற வேண்டும். தினமும் பசுவின் பால் உற்பத்தியை நோட்டில் பதிந்து வைத்திருந்தால் கடந்த ஈற்றில் உற்பத்தி செய்த பாலின் அளவை பால் நோட்டை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும்.

டாக்டர்.எம்.எஸ்.சரவணன், அரசு உதவி கால்நடை மருத்துவர், மதுரை
உலகில் காணப்படும் பல்வேறு பசு இனங்களில் தலைசிறந்த இனமாகவும் அதிக கறவை மற்றும் அனைத்து விதமான சுற்றுச் சூழலையும் சமாளித்து வாழக்கூடிய சக்தி கொண்ட இனமாக அடையாளம் காணப்பட்டது தான் ஜெர்சி பசு. உலகின் பெருவாரியான நாடுகளில் இன்று ஜெர்சி கலப்பின பசுவே பண்ணையாளர்களின் சிறந்த தேர்வாக இருக்கிறது. பால் பண்ணை அமைக்க திட்டமிடுபவர்கள் கலப்பின ஜெர்சி இன பசுக்களை வளர்க்கலாம்.

உடலமைப்பு மற்றும் பொது குணங்கள்

நேர்கோடான முதுகு, நேர்த்தியான தலை அமைப்பும் உறுதியான சிறந்த மடியுடன் அழகிய தோற்றம் கொண்டது ஜெர்சி. உடல் எடை 400 முதல் 820 கிலோ வரை எடை கொண்டது. இளஞ்சிவலை அல்லது தேன்சிவலை நிறத்தில் காணப்படும் இந்த பசுவினம் சில நேரங்களில் உடலில் வெள்ளை நிறப்பட்டைகளையும் கொண்டிருக்கும்.

கால் குளம்புகள் கருப்பு நிறத்தில் உறுதியுடன் காணப்படுகிறது. உறுதியான குளம்புகள் உள்ளதால் கால் மற்றும் குளம்பு தொடர்புடைய நோய்கள் ஜெர்சி பசுவினத்திற்கு குறைவாகவே ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்சியின் வால் முடி கருப்பு நிறத்தில் இருக்கும். வெப்ப மண்டல பகுதிகள் மற்றும் குளிர்மண்டல பகுதிகள் இரண்டிலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழும். அமைதியான குணமுள்ளது.

இந்த பசு சிறந்த மேய்ச்சல் திறன் கொண்டது. குறைந்த பராமரிப்பு செலவில் அதிக அளவு பால் தரும் இனமாகும். இனவிருத்தி திறனும் அதிகமுள்ளது. கன்று ஈனும் போது ஏற்படும் பிரச்சினைகளும் குறைவு. ஜெர்சி பசுவின் முதல் கன்று பிறப்பு 26 முதல் 30 மாதத்தில் ஏற்படுகிறது. இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட கன்று இடைவெளி காலம் 12 முதல் 13 மாதமாக உள்ளது. சிறந்த சத்துக்களை கொண்ட பாலை இது தருவதால் பன்னீர், ஜஸ்கிரீம், தயிர் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கலாம்.

அடையாளம் காணுதல்

அதிக கறவை தரும் பசுக்களை சில அடையாளங்களை வைத்து அறிந்து வாங்கி விடலாம்.

ஜெர்சி பசுக்களுக்கு எடுத்துரைக்கப்பட்ட உடலின் நிறம், வெளிப்புற தோற்ற அமைப்பு போன்றவற்றை கவனித்து வாங்க வேண்டும்.

நாள் முழுவதும் தீவனம் தின்று நன்கு செரிமானமாகும் தன்மை கொண்ட கலப்பின ஜெர்சி பசுக்களை தேர்வு செய்ய வேண்டும். பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளை வாங்கும் போது அந்த பண்ணையில் சராசரி பால் உற்பத்தியை விட அதிகம் பால் உற்பத்தி செய்யும் தலை ஈத்து, இரண்டாம் ஈத்து பசுக்களையே தேர்வு செய்ய வேண்டும்.

ஆந்த்ராக்ஸ் நோய், ரத்தநீர் நோய், தைலேரியா நோய், காய்ச்சல் நோய் அதிகம் ஏற்படும் பகுதிகளில் இருந்து பால் மாடுகளை வாங்க கூடாது.

கானை நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டு, உடல் முழுவதும் அதிக ரோமம் வளர்ச்சியுள்ள பசுக்களை தேர்வு செய்யக் கூடாது.

அடிக்கடி மாடுகளில் குறைப்பிரசவம், இளங்கன்று இறப்பு ஏற்படும் பகுதியில் கருச்சிதைவு நோய் பாதிப்பு இருக்கலாம். எனவே இத்தகைய பாதிப்புகள் இல்லாத கலப்பின ஜெர்சி பசுக்களை தேர்வு செய்ய வேண்டும். பால் மாட்டின் தலை ஒரு பங்காகவும், உடல் ஒரு பகுதி ஒன்பது பங்காகவும் கொண்ட உடல் அமைப்பில் உள்ள பால் மாட்டினை தேர்வு செய்ய வேண்டும்.

பால் மாட்டின் முதுகுப் பகுதி தலை முதல் வால் வரை ஒரே நேர்கோடாக இருக்க வேண்டும். முதுகுப் பகுதியில் அதிக வளைவுகள் உள்ள கலப்பின ஜெர்சி பசுக்களை தேர்வு செய்ய கூடாது.

கால்கள் திடகாத்திரமாக நன்கு பொருந்திய நிலையில் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு உள்ள மாடுகளை தேர்வு செய்ய வேண்டும்.

பால் மாட்டின் குளம்பு இறுகிய தன்மையுடன் குளம்பின் உட்பகுதி தேய்மானமின்றி பள்ளம் மேடுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

பால்மடி முழுவதும் ஒரே சீரான பஞ்சு போன்று தடவி பார்க்கும் போது காணப்பட வேண்டும். பால் காம்பு ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடிக்குள் அடங்கும் அளவுடன் நான்கு காம்புகளும் இடைவெளியில் இருக்க வேண்டும்.

பால் கறந்து பரிசோதனை செய்யும் போது பால் மாடு அமைதியாக இருக்க வேண்டும். பால்காம்புகள் நான்கிலும் ஒரே சீரான வேகத்துடன் ஒரே திசையில் பால் வெளியேற வேண்டும். தினமும் பசுவின் பால் உற்பத்தியை நோட்டில் பதிந்து வைத்திருந்தால் கடந்த ஈற்றில் உற்பத்தி செய்த பாலின் அளவை பால் நோட்டை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும்.

டாக்டர்.எம்.எஸ்.சரவணன், அரசு உதவி கால்நடை மருத்துவர், மதுரை

புதன், 26 பிப்ரவரி, 2014

எங்கள ஜீவனோட வாழ வைக்குது ஜீவாமிர்தம்

''எங்கள ஜீவனோட வாழ வைக்குது ஜீவாமிர்தம்!''
''வாழைக்கு முட்டுச் செலவு இல்லை...''
''
இத்தனை பெரிய இலை வாழையைப் பார்த்ததில்லை''
‘‘
ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஆரம்பிச்சதுமே, தென்னைக்கு நடுவுல ஊடுபயிரா இலைவாழை 3 ஏக்கரும், நேந்திரம் வாழை 1 ஏக்கரும் போட்டேன். '10 ஏக்கர் நிலமிருந்தா, அதுல 2 ஏக்கரை மழைநீர் சேகரிப்புக்கு ஒதுக்கணும்Õனு பாலேக்கர் சொல்லியிருக்கிறார். அதனால, மழைநீர் சேகரிப்புக் குட்டை ஒண்ணு அமைச்சேன். இது என்னோட விவசாயத்துக்கு ரொம்ப உதவியா இருக்கு.
இப்ப என் தோட்டத்துல இலை வாழை மரங்கள் 3,000 இருக்கு. இலை வாடாம இருக்கற துக்காக 15 நாளைக்கு ஒரு தடவை ஜீவாமிர்தக் கரை சலை விடுறேன். இதனால இலை வாடாம இருக்குது. கூடுதல் பலனா, மரத்தோட அடித்தண்டு பெருத்து வளருது. வேகமா காத்து அடிச்சாலும் மரம் சாயாம நின்னுக்கிட்டிருக்கு. ரசாயன உரத்தைக் கொட்டினா... மரம் மெலிஞ்சி இருக்கும். காத்துல சாய்ஞ்சிடாம இருக்கறதுக்கு முட்டு கொடுப்போம். இப்ப அந்த வேலை கிடையாது. முட்டுக்கான செலவும் கிடையாது.
இலை வாழையைப் பொறுத்தவரைக்கும் ஆறு மாசத்துல இலையை அறுக்க ஆரம்பிக்கலாம். ஆனா, என்னோட தோட்டத்துல நாலரை மாசத்துலயே இலை அறுப்புக்கு வந்துடுது. Ôஇந்த அளவுக்கு பெரிசான இலையை வேற எங்கயும் பார்த்ததில்லைÕனு வியாபாரிங்க ஆச்சர்யப்பட றாங்க. எல்லாம் ஜீவாமிர்தம் தந்த மகிமைதான்னு அவங்களுக்கெல்லாம் விளக்கிச் சொன்னப்ப, அசந்துபோயிட்டாங்க.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

Training for scientific Goat farming

The on campus training on scientific Goat farming is scheduled to be conducted on 12.03.2013 & 13.03. 2013 at KVK,Kattupakkam ( oop. to SRM University) by 10.00 a.m.
Dr. P. KUMARAVEL, Ph.D.Programme Coordinator &Professor and HeadKrishi Vigyan KendraKattupakkamKanchipuram District
Ph : 044 - 27452371E-mail : kvkkpm@yahoo.co.inkvk-kattupakkam@tanuvas.org.inWebsite : www.kvkkanchipuram.comKrishi Vigyan Kendra (KVK)www.kvkkanchipuram.com


தீவனத்தை அதிகப்படுத்த விவசாயிகள் கோரிக்கை


மானிய விலையில் வழங்கப்படும் கால்நடைகளுக்கான உலர் தீவனத்தை அதிகரிக்குமாறு, கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 இடங்களில், கால்நடைகளுக்கான உலர்தீவன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மானியவிலையில், கால்நடைகளுக்கான உலர் தீவனம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாட்டுக்கு நாளொன்றுக்கு 3 கிலோ வீதம், அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு 15 கிலோ உலர் தீவனம் வழங்கப்படுகிறது.
இந்த அளவு போதுமானதாக இல்லை என கூறும் விவசாயிகள், இதனை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு வழிகாட்டுதலின்படியே, கால்நடை தீவனம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.

திங்கள், 24 பிப்ரவரி, 2014

மா... நெல்லி... கொய்யா... சப்போட்டா...


மா... நெல்லி... கொய்யா... சப்போட்டா...  நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மின்சாரம்; தண்ணீர் வற்றிய கிணறு; தலைவிரித்தாடும் வேலையாட்கள் தட்டுப்பாடு; இவற்றுக்கு இடையில்... வானத்தையும், வருண பகவானையும் நம்பி, மானாவாரி பூமியில் விவசாயம் செய்வது என்பதே பெரும் சாதனைதான். இந்த நிலையில், 26 ஏக்கர் நிலத்தில் சப்போட்டா, மா, நெல்லி, கொய்யா என பழவகைகளை சாகுபடி செய்து, நல்ல வருமானத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்... திருவண்ணாமலை மாவட்டம், வடக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந் திரன்-மேகலா தம்பதி என்பது, நம்பிக்கையூட்டும் விஷயம்தானே! வறண்டு கிடக்கும் நிலங்களுக்கு, மத்தியில் செழிப்பாக இருந்த தோட்டத்தில் காய்த்துக்குலுங்கிய நெல்லி மரங்களுக்கிடையில் ராஜேந்திரன்-மேகலா தம்பதியைச் சந்தித்தோம். முதலில் பேசிய ராஜேந்திரன், ''எனக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி பக்கத்துல சின்னமுத்தூர். அஞ்சு ஏக்கர் நிலத்துல கடலை, வெத்தலைக் கொடிக்கால், கேழ்வரகு மாதிரியான பயிர்களை எங்கப்பா சாகுபடி செய்துட்டிருந்தார். நானும், விவசாயம் பார்த்துக்கிட்டே ஐ.டி.ஐ. வரைக்கும் படிச்சேன். 80-ம் வருஷம் திருச்சி. . .

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

உழவர்க்கு வாழ்வூட்டு – வேளாண் கண்காட்சி இன்றுடன் நிறைவு

உழவர்க்கு வாழ்வூட்டு – வேளாண் கண்காட்சி இன்றுடன் நிறைவு
 
பதிவு செய்த நாள் - பெப்ரவரி 23, 2014, 1:45:43 PM
மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 23, 2014, 3:20:39 PM
புதிய தலைமுறையின் உழவுக்கு உயிரூட்டு, உழவர்க்கு வாழ்வூட்டு - வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, திருச்சி தேசிய கலைக் கல்லூரி மைதானத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.
தேசிய கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில், 70 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, இயற்கை முறை வேளாண்மை மற்றும் நவீன வேளாண் கருவிகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. பாரம்பரிய தானியங்கள், இயற்கை முறை விவசாயப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இன்றைய நிகழ்ச்சியில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, நன்னீரில் இறால் வளர்ப்பு குறித்து கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. கடந்த இரண்டு நாள் நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மூன்று நாட்களாக நடைபெறும் இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

சனி, 22 பிப்ரவரி, 2014

ஆட்டு கொட்டகை அமைத்தல்

புதியதலைமுறையின் வேளாண் கண்காட்சி : ஆடு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு

2-வது நாளாக புதியதலைமுறையின் வேளாண் கண்காட்சி
 
பதிவு செய்த நாள் - பெப்ரவரி 22, 2014, 12:41:03 PM
மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 22, 2014, 1:04:11 PM
புதிய தலைமுறையின் உழவுக்கு உயிரூட்டு... உழவர்க்கு வாழ்வூட்டு... வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, திருச்சி தேசிய வேளாண் கல்லூரி மைதானத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இதில், விவசாய துறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சியை விளக்கும் வகையில் விவசாயத் துறை சார்ந்த சிறப்பு வேளாண் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன வேளாண் கருவிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
இயற்கை விவசாய முறைகள் குறித்த தகவல்களும் பார்வையாளர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு காண, துறை சார்ந்த நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்க உள்ளனர். விவசாயிகளுக்கு வங்கிக் கடன் வசதி குறித்தும் தகவல் அளிக்கப்பட உள்ளது.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

உழவுக்கு உயிரூட்டு உழவர்க்கு வாழ்வூட்டு கண்காட்சி தொடக்கம்

உழவுக்கு உயிரூட்டு உழவர்க்கு வாழ்வூட்டு கண்காட்சி தொடக்கம்
 
பதிவு செய்த நாள் - பெப்ரவரி 21, 2014, 10:19:51 PM
மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 21, 2014, 10:19:51 PM


புதிய தலைமுறையின் உழவுக்கு உயிரூட்டு. உழவர்க்கு வாழ்வூட்டு. வேளாண் கண்காட்சி திருச்சியில் இன்று தொடங்கியுள்ளது.
தேசியக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை வேளாண்மை குறித்தும், நவீன வேளாண் கருவிகள் குறித்தும் இந்த அரங்குகளில் விவசாயிகள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. தினம்தோறும் பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
இதில் வேளாண் பேராசிரியர்கள் மற்றும் விவசாயத் துறை அறிஞர்களுடன், சாதனை விவசாயிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கின்றனர். மேலும் வங்கிக் கடன் பெறுவது குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
PTTV_SNAP_NEWS_UU_3
PTTV_SNAP_NEWS_UU_2
PTTV_SNAP_NEWS_UU_1

மானிய விலையில் கால்நடை தீவனம்

மானிய விலையில் கால்நடை தீவனம்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் கால்நடை தீவனம் பெற்றுக்கொள்ளலாம். 

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை காலத்தில் கால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், விவசாயிகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் ஒரு கிலோ உலர் தீவனம் ரூ.2க்கு வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. 

அடையாள அட்டை வைத்திருக்கும் கால்நடை வளர்ப்போருக்கு ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றிற்கு 3 கிலோ வீதம் அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு உலர் தீவனம் வாரந்தோறும் பெற்றுக்கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை, கருங்குளம், தென்திருப்பேரை, மெஞ்ஞானபுரம், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் ஆகிய 6 கால்நடை மருந்தகங்களில் உலர் தீவன மையங்களில் 22.02.2014 முதல் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் தங்களது குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படத்தினை கொடுத்து உலர் தீவனம் வாங்குவதற்கு உரிய அடையாள அட்டை பெற்று பயனடைய மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

உழவுக்கு உயிரூட்டு... உழவர்க்கு வாழ்வூட்டு திருச்சியில்

உழவுக்கு உயிரூட்டு... உழவர்க்கு வாழ்வூட்டு... என்ற முழக்கத்துடன் புதிய தலைமுறையின் வேளாண் கண்காட்சி திருச்சியில் feb 21to feb 23 2014 நடைபெற உள்ளது.

கண்காட்சியில், விவசாயப்பிரச்னைகளுக்கு தீர்வுகள், அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள், நிதி உதவிகள் குறித்த வழிகாட்டுதல்கள், மானியங்கள் பற்றிய தகவல்கள், மதிப்பு கூட்டுதல், விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், இயற்கை விவசாயம், குறைந்த செலவில் அதிக வருவாய் ஈட்டும் வழிமுறைகள் ஆகியவற்றுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

புதிய தலைமுறை சார்பில் இரண்டாம் ஆண்டாக நடத்தப்படும் இந்த கண்காட்சி திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே மைதானத்தில், வரும் பிப்ரவரி மாதம் 21ந்தேதி தொடங்கி 23ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது.

கண்காட்சி தொடர்பான தகவலுக்கு, 8056007209, 8754428928, 8754417328, 9500019431/32/36 ஆகிய எண்களில் தொடர்புக்கொள்ளலாம்.

அரங்குகளில் நவீன வேளாண் கருவிகள், வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.
விவசாயிகளுக்கு மட்டுமின்றி, இளைஞர்களுக்கு வேளாண்மையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது, கால்நடைகள் வளர்ப்பவர்கள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் வேளாண் கண்காட்சிக்கு புதிய தலைமுறை ஏற்பாடு செய்துள்ளது.

வியாழன், 20 பிப்ரவரி, 2014

இன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான்

இன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான் கோழி வாத்து மற்றும் அனைத்து வகை முட்டைகளைப் பொரிக்க வைக்க



















மேலும் விபரங்களுக்கு மற்றும் வாங்கிட அழைத்திடுங்கள்.


   Contact Suppiler   


yarasoolgoatfarm@gmail.com
hajamohinudeen20062@gmail.com
hajamohinudeen2006yahoo.co.in
+919600457130